Thursday, March 7, 2013

பெண்மையே...


தாயாய்த் தங்கையாய்
தோழியாய் துணைவியாய்
மகளாய் மதிப்பாய்
மருமையிலும் துணையாய்
வருபவளே !

நதியாய்ப் பெருக்கெடுத்து
நானிலம் செழிக்கவைத்து
நன்றி கெட்ட மானிடர்
நலம் பேணச்
செய்பவளே !

ஆதியாய் சோதியாய்
அகிலம் முழுதுமாய்
ஆதர வளித்தாங்கே !
நிதர்ச னமாய்த்
திகழ்பவளே !

பெண்மையே அம்மையே
பேரின்பமே பேரருளே
உற்ற தாய் உன்னையே
உண்மையில் வணங்கிடில்
உலகினில் உயர்வாரே
உத்தமராய்.

1 comment:

  1. ஆதியாய் சோதியாய்
    அகிலம் முழுதுமாய்
    ஆதர வளித்தாங்கே !
    நிதர்ச னமாய்த்
    திகழ்பவளே !

    தாயே துணை நீயே அம்மா.

    ReplyDelete