தாயாய்த் தங்கையாய்
தோழியாய் துணைவியாய்
மகளாய் மதிப்பாய்
மருமையிலும் துணையாய்
வருபவளே !
நதியாய்ப் பெருக்கெடுத்து
நானிலம் செழிக்கவைத்து
நன்றி கெட்ட மானிடர்
நலம் பேணச்
செய்பவளே !
ஆதியாய் சோதியாய்
அகிலம் முழுதுமாய்
ஆதர வளித்தாங்கே !
நிதர்ச னமாய்த்
திகழ்பவளே !
பெண்மையே அம்மையே
பேரின்பமே பேரருளே
உற்ற தாய் உன்னையே
உண்மையில் வணங்கிடில்
உலகினில் உயர்வாரே
உத்தமராய்.
ஆதியாய் சோதியாய்
ReplyDeleteஅகிலம் முழுதுமாய்
ஆதர வளித்தாங்கே !
நிதர்ச னமாய்த்
திகழ்பவளே !
தாயே துணை நீயே அம்மா.