Wednesday, May 23, 2012

ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்


ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்

காவியில் சிலர்
காதியில் பலர்
காக்கி உடுப்பிலும்
காக்கும் பொருப்பிலும்
அதிகார வர்க்கத்தின்
ஆதிக்க நிலையிலும்
இன மொழி மதவாத
மதிப்புமிகு மருவாதைகளும்
பணத்திற்காய் நித்தம்
பிணம் தின்னும் கழுகுகளும்
சமூக அந்தஸ்துள்ள
சமயப் பெருச்சாளிகளும்
சுயநலத்தின் சுகத்திற்காய்
ஏங்கும் சுயவிளம்பரப்பிரியர்களும்
எது நிகழ்ந்தாலும் எமக்கென்ன
என்று திரியும் ஏதிலிகளும்
வீண் பேச்சு பேசி வெட்டியாய்த்
திரியும் வெடலைகளும்
எந்தப் பொருப்பும் ஏற்க்க மறுக்கும்
பொருப்பில்லாதவர்களும்
உலக நடப்பு தெரிந்தும் தெரியாதவர்களாய்
திரியும் கணவான்களும்
வாக்கு போடக்கூட வாக்கிங் செல்ல
துணிபு இல்லா சோம்பேரிகளும்
நோட்டுக்கு ஓட்டு என்று
விலை பேசும் வித்தகர்களும்
விலைபேசி வாக்களிக்கும்
சாமானியரும்
தவறு கண்டும் காணாதவராய்
போகும் குருடர்களும்
கலப்படத் தொழில் செய்யும்
கலப்பினமும்
விளையாட்டுகளை விலை
பேசும் வீணர்களும்
அகம் ஒன்று புறம் ஒன்றாய்
ஜெகம் போற்ற வாழ்பவரும்
இது போன்ற இன்னும் பலர்
இதே வழியில் செல்பவர்கள். . .
ஊரை மட்டு மல்ல உலகை கெடுக்கும் உத்தமர்கள்.

Monday, May 21, 2012

அன்னா ஹசாரே



உயர்ந்த எண்ணங்கள் கொண்டவர்
உயரம் சற்றே குறைந்தவர்
ஊழல் ஒழிக்க பாடுபடும்
உண்மையான தொண்டரிவர்.

என்பது வயதுகள் தாண்டியும்
ஈரெட்டு வயதாய் உழைக்கின்றார்
என்ன உழைத்து பார்த்திடினும்
துவங்கிய இடத்திலே இருக்கின்றார்.

ஊர் முழுக்க இளைஞர் படைதிரட்டி
உன்னதமான பணி சிறக்க
ஓடி ஓடி உழைக்கின்றார் உடலின்
ஒத்துழையாமையைத் தடுக்கின்றார்.

ஊழல் ஒன்றே உண்மை என்று
உழைக்கும் உத்தமர் நடுவினிலே
ஊழல் அற்ற உலகம் படைக்க
நினைப்பவர் பாடு புரிந்திடுமே !

உலகம் முழுக்க ஊழல் என்று
ஊரிப்போன பின்பு கூட
ஊழல் அறுக்க ஊர்முழுக்க
படை திரட்டிடும் பண்பை என்ன சொல்ல ?

காலம் ஒருநாள் மாறும்
இவர் கனவுகள் யாவும் தீரும்
பட்டங்கள் ஆள்பவர் மத்தியிலே- சில
சட்டங்கள் ஆளும் காலம் வரும்.
***

Friday, May 18, 2012

சூழ்ச்சி


சுழழுகின்ற புவிமுழுதும்
சூழ்ந்து நின்ற போதிலும்
சூனியத்தின் முயற்ச்சியால்
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

ஆளுகின்ற ஆட்சிகளின்
அடிமைத்தன புத்தியால்
சக்தியொன்று அழிந்து போக
சூழ்ச்சியொன்று நடக்குதே

தனித் தமிழின் பெருமைபோல
துணிந்துநிற்கும் மறத் தமிழனை
சூழ்ந்து நின்று கைதியாக்க
சூழ்ச்சியொன்று நடக்குதே

ஏழுநாடு ஒன்று கூடி
ஏமாந்த வேளையில்
எந்தமிழரை வென்றுபோக
சூழ்ச்சியொன்று நடக்குதே

ஆண்டதமிழ் பெருமை தனை
அறியாத் தமிழர் ஒருவரை
ஆசைகாட்டி மோசம் செய்ய
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

அடிமைத்தனத்தின் மடமையோடு
மாறுபட்டுத் திகழ்ந்திட - நம்
ஆனிவேரை அறுப்பதற்கு
சூழ்ச்சி ஒன்று நடக்குதே

என்னவளே !

உயிரோ அல்ல உடலோ -என்
இதயத்தில் உதித்த மலரோ

கனவோ அல்ல நினைவோ
அவள் கலந்ததென்ன உறவோ

இசையோ அல்ல மழையோ- ஈருடல் 
சேரும் போதென்ன நிலையோ

குயிலோ அல்ல குரலோ- அவள் 
கூவுவதென்ன மொழியோ

நிலவோ கடும் குளிரோ -அவள்
கண்களில் அத்துனை நிறைவோ

இதமோ அல்ல பதமோ
இயற்கையே இது தகுமோ

மகரந்த ங்களின் மழையோ- சற்றே
இதமாய் தாங்கிடும் துணிவோ

அகரம் முதலாய் அவளோ
அஃகு பஞ்ச்சரான நிலையோ

பிரபஞ்சத்தில் ஆதி முதலாகவே -இதுவோ
இங்கு நிகழ்வது தான் புதிதோ

இயற்கையி
ல் நியதிகள் உளதோ
உணர்வுற்ற பின்னே பிரிவோ.