Sunday, March 3, 2013

எதை நோக்கிப் பயணிக்கிறது இளைய தலைமுறை ?


நல்ல தலைமை இல்லா
வெற்றிடம்
நற் பண்புகள் குறைந்திடக்
காரணம்
சுவ ரொட்டிகள் ஒட்டிப்
பிழைத்திடும்
சுய நலமாய் அவை
சிரித்திடும்
எதையும் செய்திடத்
துணிந்திடும்
எவர்க்கும் அஞ்சிட
மறுத்திடும்
இளைய தலைமுறை
எதிர்காலப் பயணம்
என்ன வாகும் ?
என்றே கலங்கும்
காலமிது !

எதிர்காலக் கனவிலே
மிதக் கிறான்
நிகழ்காலம் இழந்து-பின்
துடிக் கிறான்
தாயகத் தற் புகழ்ச்சி
பேசிப் பேசி
தரணி முழுமையும்
பயணி க்கிறான்.

இளமையில் வாழ்வினைத்
தொலைக் கிறான் -தினச்
செய்தி களுக்காய்த் தோள்
கொடுக் கிறான்
சித்தம் தெளிந்து வாழ்வதை
விடுத்து – தினம்
செத்துச் செத்தே பிழைக்கிறான்

நடிகர்கள் போலவே
நடிக்கிறான்
நல்ல நாடக மிதனையே
ஏற்கிறான்
தன் வாழ்க்கையின் பாதி
நாட்களையே
நாடக மாக்கி கழிக்கிறான்

உற்றார் பெற்றோர்
உறவுகளை
உதறித் தள்ளியே
நிற்கிறான் !
சுயநலத்தின் சுகத்திற்க்காய்
சுய மாய்ச் சிந்திக்கிறான் !
உறவுகள் இல்லா
இழி நிலைக்கு
தன்னை தாழ்த்திக்
கொண்டே இருக்கிறான்.

எதனையும் ஏற்கவே
மறுக்கிறான்
இதயம் இல்லாதவர் போல்
இருக்கிறான்
இதயம் தொலைத்த இரும்பு
மனிதனாய்
தினம் தன்னை தொலைத்தே
அலைகிறான்

கொள்கையில்லா
மாந்தர்கள் கூடே
கூட்டமாய்க் கொக்கறிக்கிறான்
கொள்கை வகுத்து
நிற்பது விடுத்து
அடுத்தவர்க்கு தோள்
கொடுக்கிறான்.

இவ்வா றெல்லாம் கதைக்கின்றார்
பொருப்பில்லா சிலரோ
நகைக்கின்றார்
ஏதும் அறியாச்
சிறுவர்கள் போலே
இளையவரைக் குறை
சொல்லியே பொழுதினைக்
கழிக் கின்றார்.

ஏதேதோ சொல்கின்றார் !
இளையவர் சொல்வதைக்
கேட்க மறுக்கின்றார் !
எல்லைகள் விரிந்த
இளையவர் நோக்கம்
புரிந்தும் புரியாது
இருக்கின்றார் !

தலைமுறை தாண்டிய நோக்கமிது
தலைமுறை தலைமுறை
தாண்டி நிற்குமிது
தன்னலம் மறந்து
தாயகம் காக்கும்
தரணி போற்றும்
பயணமிது !

எல்லைகள் முழுதும்
காக்கின்றான்
தம் எல்லைக்குள்ளே
நிற்கின்றான்
இளமை முழுதும்
காவலில் தொலைத்தே
இயற்கையோடு இணைகின்றான்.

உலகம் முழுதும் கைவலைக்குள்
என்றே தினமும்
எண்ணி எண்ணி
திரைகடல் சுறுக்கி
திரவியம் வளர்த்த
இளையவர் மாண்பு
புரிந்திடுமோ ?

இந்திய நாணயம்
அதுக்கோர் குறியீடு
வேண்டு மென்றே
நம் மினத்து
இளைஞர் முயற்சி
மிக்கதால் இக் குறியீடாம்
எவரும் இதனை மறுப்பரோ ?
எழும்பில்லா நாக்கினைச்
சுழற்றிக் கதைப்பரோ ?

யா வர்க்குமாய் இவன்
உழைக்கிறான்
யதார்த்த உலகிலே
பய ணிக்கிறான்
சுயக் கட்டுப் பாடுகள்
கொண்டே சுயம்புவாய்
எழுந்தே நிற்கிறான்.

சிந்தை சிதறா இளைஞனிவன்
தன் சிந்தனைத் துளிகளை
விதைத்தவன்
கண்ணீர்த் துளி தேசத்
தமிழருக்காய்
தனதுயிரையும் துச்சமாய்
கொடுத்தவன்.

மந்தைகள் போலே
வாழ்ந்த மனிதரை
தம்மினத் தமிழருக்காய்
சிந்திக்க
வைத்திட்ட இளைஞ னிவன்
நம்மில்
ஒற்றுமை உணர
வைத்திட்டான் உலகத் தமிழர்
ஒற்று மைக்காய்
உயிர் துறந்திட்டான்.

உலகம் முழுதும்
வாழும் தமிழர் - ஒன்றே !
என்று லகோர்க்கு
உணர்த் திட்டான்
நாளைய விடியல்
நம தென்றே
உணர்ந் திடவும்
வழி வகுத்திட்டான்.

சமுகப் பொருப்பினை
ஏற்கிறான் - இவன்
சமுதாயத் துயர் துடைக்கிறான்
ஏற்றத் தாழ்வு இல்லா
நிலை தனை எடுத்தே
இயம்பி இருக்கிறான் .

சாதி மறுப்புத் திருமணங்கள்
சார்ந்தே இவனிருக்கிறான்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றே உணர்த்திட வைக்கிறான்.
உறவுகள் விட்டு
தனிமைகள் தொட்டு
உற்றம் சுற்றம்
நட்பும் விட்டு
உறவுக்காய் பயணிக்கிறான்

தம் உறவுகள்
மேம்பட உழைக்கிறான்.
உற்றார் பெற்றோர்
உறவுகள் போற்ற
உரிமைகள் பலவும்
இழக்கிறான்
உன்னத உறவுகள்
உயர்ந்து நிற்க - தானேத்
தனிமையை ஏற்கிறான்.

தமிழர்கின்னல் விழைந்திடும்
நிலைதனில் தாமாய்
முன் நிற்கிறான்.
இளைஞர் ஒருவர்
முயற்சி இல்லையேல்
என்ன வாகும் இவ் வுலகம்
எண்ணிப் பார்த்தால்
உண்மைகள் புரியும்.

நல்லன நோக்கி
நல்லன நோக்கி
நற் சிந்தனைகள்
அதனையும் நோக்கி
நாடு முன்னேற்ற
மதனையும் நோக்கி - நல்ல
பண் பாடுகளையும் நோக்கி
வரலாற்றுச் சுவடுகள் நோக்கி
வலிமையான பாரதம் நோக்கி
முன்னோடித் தமிழ்
மொழி நோக்கி
முயற்சி யோடு
முதன்மைகள் நோக்கி
தலைமுறை கடந்து
சிந்திக்கிறான்
தன் தலைமுறைக்காய்
பயணிக்கிறான்.

No comments:

Post a Comment