Monday, October 15, 2012

தேவர்


பசும்பொன் கண்டெடுத்த
பத்தரைமாத்துத் தங்கமாம்

உக்கிரபாண்டி இந்திராணி - ஈன்றெடுத்த
இயற்றமிழ் சொற்றொடராம்

ஊரறிந்த நாயகனாம் - தேவர்
உண்மை உரைப்பவராம்

வீரத்தின் விளைநிலமாம் - தேவர்
விவேகத்தின் சுடரொளியாம்

ஆன்மிகத்தின் அறிவொளியாம் - தேவர்
அரசியலின் கலங்கரை விளக்காம்

தேசிய விடுதலைக்காய் - தேவர்
தீராதுழைத்திட்டார்

கால்பகுதி வாழ்நாளில் - தேவர்
சிறைதனிலே கழித்திட்டார்

அடிமைத்தளைகள் அறுந்திடவே - தேவர்
அயராது ளைத்திட்டார்

ஆள் பிடிக்கும் சட்டத்தினை - தேவர்
அடியோடு அகற்றிட்டார்

நேதாஜி போஸ் உடனே - தேவர்
நேர்மையோடு பாடுபட்டார்

ஊர் முழுக்க படை திரட்டி - தேவர்
ஒன்றிணைந்து உழைத்திட்டார்

தீண்டாமை ஒழிந்திடவே - தேவர்
தீர்க்கமாக செயல்பட்டார்

தமிழகம் முழுவதிலும் - தேவர்
தளராத் தொண்டு செய்தார்

காங்கிரஸ் கட்சியினை - தேவர்
கால்பதிக்க வைத்திட்டார்

ஊருக்காய் உழைத்தவர் - தேவர்
உண்மையாய் வாழ்ந்தவர்.

சாதியம் மறுத்தவர் - தேவர்
சமத்துவம் கண்டவர்

சமபந்திதனை கொண்டு - தேவர்
சமரசம் கண்டவர்

தம் சொத்துக்களை  - தேவர்
சரிபங்கு பகிர்ந்தளித்தார்

சாதி மத பேதமன்றி - சம பங்கு
தானளித்தார் தேவர்

தேசியம் காத்திட்டார் - தேவர்
தெய்வீகம் கண்டுணர்ந்தார்

தன்நலம் கறுதாது என்றும்
பிறர் நலம் காத்தவர் - தேவர்.

 ***