கண்டதும் கேட்டதும்
கணக்கறியாததும்
தெரிந்ததும் தெளிந்ததும்
தெளிவற்றிராததும்
இம்மையும் மறுமையும்
இன்னவென்றறியாததும்
உண்மையும் பொய்மையும்
உணர்ந்து கொள்ளுமுன்னயும்
சப்தமும் சகலமும்
திரண்ட சாத்திரங்களும்
அண்டமும் பிண்டமும்
அகண்ட பிரம்மாண்டமும்
நாளும் கோளும் நன்மை செய்ய
நால்வகை வேதமும்
முக் காலமும் உணர
மூண்டெழும் மூலாதாரமும்
சுத்த வெளித் தத்துவம்
சுழற்ச்சியும் முறைகளும்
ஏணிப்படிகளாய் மேல்
ஏறுகின்ற நாதமும்
உச்சிவெளி வந்தபின்
உணர்ந்து கொள்ளும் வேதமும்
ஊழ் வினை அறுத்துநிற்கும்
உண்மை பரபிரம்மமும்
தேவரும் மூவரும்
தெளிந்து நின்ற சோதியும்
நாத தத்துவங்களும்
நமசிவாய சாரமும்
அஞ்செழுத்து மந்திரத்தை
ஆழ்ந்து யாசித்த பின்
அங்கிங்கெனாதபடி
எங்கும் பிரகாசமாய்
என்னுள் கலந்து நின்ற
எம்பெருமான் ஈசனே
...