Sunday, March 3, 2013

ஈழம் . . . .


ஆண்ட தமிழ் பெருமை சாற்றும்
ஆதிக்க தமிழ்ப் புலமை போற்றும்
ஆதி இலெமூ ரியாக் கண்டத்தின்
ஆதி சான்றாய் விளங்கி நிற்கும்
ஆசியக் கண்டமிது.

வந்தவர்க்கு கரம்கொடுத்து - அவர்
வருங்கால சந்ததிக்கும்
வறுமை போக்கி வாழ்வளித்து
வசந்தங்களை பங்குபோட்டு
வாழ்வளித்த கண்டமிது.

பிழைப்பு தேடி வந்தவன்
ஒற்றுமையாய் உயர்ந்திருக்க
பிழைப்பைக் கொடுத்தத் தமிழரோ
வேற்றுமையில் பிரிந்திருக்க !

கருனையின்றிக் கருணாவோ
காட்டிக் கொடுத்து பிழைத்திருக்க
தந்நிகரில்லாத் தலைமகனை
இழந்து தமிழர் வாடிநிற்க !

சிறு பிள்ளை பாலகனும்
தமிழினத்தில் பிறந்ததினால்
தாங்கொனாத் துயரத்துடன்
தமதுயிர் விதைத்திழந்தானே !

கொடுங்கோலரக்கர் கூட்டமதில்
நந் தமிழர் அகப்பட்டு
சூழ்ச்சி வலையில் சிக்குட்டு
சூனியமாய்ப் போனதென்ன !

ராசபட்சே இராட்சசனாய்
மாறிவிட்ட அவலத்தினை
கூடி நின்று கேட்டிடவே
கோடி சனம் இருந்தும் என்ன ?

உலகம் முழுதும் இருக்கின்றோம்
உணர்வற்றா பிறக்கின்றோம்
இத்துனைத் தமிழர் அழிந்த பிறகும்
தமிழனாய் ஏன் இருக்கின்றோம்

தமிழினை ஏன் உரைக்கின்றோம் ?
ரெளத்திரம் பழகு என்றான் பாரதி
எதிரியைக் கூட மன்னிக்கலாம்
துரோகியை ! தமிழினத் துரோகியை

தலை சிறந்தத்  தமிழினம்
தம் புகழ் இழந்து நிற்பதென்ன !
அன்று முதல் இன்று வரை
எதிரிகளால் மட்டு மல்ல !
துரோகிகளின் சூழ்ச்சி தானே !

நினைத்து நினைத்து நெஞ் சகத்து
குருதி வடித்து வடித்து
உருகி உருகிச் சாவதை விட
உரிமைக்காய் என்ன செய்வதினி ?

ஒட்டு மொத்த தமிழனும் ஓர்நாள்
ஈழம் நோக்கி பயணிப்போம்
ஈன்ற தமிழ் மண்ணதையே
நம தாக்கிடவே சபதிப்போம்.

No comments:

Post a Comment