Sunday, March 3, 2013

சாதியம். . ..


சாதி என்ற சாக்கடை
சமத்து வமாய் உலவுதே
சாமானியரை சரிசமமாய்
ஏற்றுக் கொள்ள மறுக்குதே
சத்தியம் உறைக்குதே !

சாதி சாதி என்னடா ?
எங்கிருந்து வந்தது ?
தமிழினத்தைக் கூறு போட
ஆரியம் கொணர்ந்ததா!

சாதி விட்டு சாதி விட்டு
சாதியம் தொலைத்து விட்டு
மனித நேயம் மக்கள் பண்பு
என்று தான் கொணர்வதோ !

தமிழனைப் பிரித்த மாயை
ஆரியம் விரித்த தோகை
மாயையில் மயங்கி நாமும்
தயங்கியே திரிவதேன் ?

மேலானவன் கீழானவன்
வகுத்தவன் யாரடா ?
பிறந்த பிறப்பினை கூறுபோடும்
பிற் போக்கிகளைப் பாரடா !

கூட்டமாய் வாழ்ந்தவன்
குழுக்களாய்ப் பிரிந்தவன்
வாழ்ந்தவந்த இடத்திற்கேற்ப
தன்னை மாற்றிக் கொண்டவன்.

செய்யும் தொழிலைத் தெய்வமாய்
சிறக்க போற்றி வாழ்ந்தவன்
தொழில் அனைத்தும் சாதியாய் - மாற்றி
ஞானம் கொண்ட தேனடா !

நம்மைப் பிரித்து வாழ்ந்தவன்
நம்மில் உயர்வு கொண்டவனாய்
இருக்க வழி வகுத்து - நம்மைத்
தாழ்த்திக் கொண்ட தேனடா ?

மனிதனாய் பிறத்தலே
மக்கட்பன்பு கொள்தலே
மக்களின்று மாக்களாய்
மாறிப்போன தேனடா .

மனிதன் தெய்வ நிலையிலே
மாறிப்போக நினைக்கிலும்
மனிதன் முதலில் மனிதனாய்
மாறி நிற்க வேணுமே !

உயர்வு தாழ்வு அற்று நீர்
உண்டுறங்கி மகிழவே
உண்மை நிலை எண்ணியே
உத்தமராய் வாழலாம்.

No comments:

Post a Comment