Thursday, August 26, 2010

நட்பு

இதற்க்கு மறுபெயர் புனிதம்

உறவுகளன்றி வருவது
உறவுக்கும் மேலாய் இருப்பது
உணர்வுகள் ஒன்றிக் கிடப்பது
உண்மையாய் உயிராய் காபபது

எதிர்ப்புகள் இன்றி வளர்வது
எதிர்பார்ப்புகள் இன்றி இருப்பது
எதனையும் தாங்கிடத் துணிவது
எப்பொழுதும் உடன் இறுப்பது

நட்புக்கு மேல் ஒரு சொந்தம் இல்லை
நட்புக்கு மேல் ஒரு பந்தம் இல்லை
நட்புக்கு மேல் ஒரு உறவும் இல்லை
நல்ல நட்புக்கு இணை எதுவுமில்லை.



Monday, August 23, 2010

காதல்

உணர்வுகள் முழுதும் ஒன்றிக் கிடக்கும்
உன்னதமான உறைவிடம்.
உற்றார் பெற்றோர் உறவினர் அனைத்தும்
ஊழ் வினைபோலே துறத்திடும்.

உறவுகள் இன்றி தவித்திடும் போது
உறங்க விழிகள் மறுத்திடும்.
உறவும் உணர்வும் ஒன்றானால்
காதல் கூட சுகம் தானே !

காதல் என்பது கொச்சை அல்ல
காணும் கண்களைப் பொறுத்தது தான்
கண்களும் காதலும் ஒன்றானால்
கண்ணீர் கூட இணித்திடுமே !

இம்மையும் மறுமையும் அதற்கில்லை
இதயங்கள் இணைவது மறுப்பதில்லை
இருவரின் இதயங்கள் இணைவதற்காக
ஏனையர்கள் இருட்டில் தவிப்பதும் ஏன் ?

காதலும் காமமும் ஒன்றென்று
காண்பவர் பலரும் கருதுகிறார்
காதலும் காமமும் ஒன்றல்ல - ஆனால்
ஒன்றை விட்டு மற்றது பிரிவதல்ல.

காமம் அன்றி காதல் நிலைத்திடும்
காதலில் காமம் வசப்படும்
உலகத்து உயிர்கள் நிலைத்திருக்க
இரண்டும் ஒன்றாய் இறைவனின் படைப்பில்.
****

Thursday, August 19, 2010

காலம்

யாருக்காகவும் நிற்காது
யாரையும் எதிர்க்காது
தமக்குள்ளே வருபவரை
தன்னோடு அழைத்து செல்லும்
பருவம் மாறும்
யுகங்கள் மாறும்
காலம் என்றும் மாறாது
மாறுவதாய் தெரிந்தாலும்
என்றும் மாறாமல் சுழல்வது
காலத்தையும் விஞ்சி நிற்கும்
கருத்துகள் பலவும் படைத்திட்டால்
காலத்தினுள் நாம் மூல்கிடினும்
நம் கருத்துகள் காலத்தினை
கடந்து நிற்கும்.

மதம்

கண் தெரியா குருடனுக்கு
ஊன்று கோலே வழிகாட்டி
ஊன்று கோலில் வலியது
எது சிறியது எது ?
ஊண்று கோலின் உதவியோடு
வழியறிந்து நடந்து விட்டால்
வந்த காரணம் அறிந்து
சேறுமிடம் சேர்ந்திடலாம்
ஊண்றுகோலை பிடித்து கொண்டு
அங்கேயே நின்று விட்டால்
ஊண்று கோலும் கூடஉதவிட மறுததிடுமே.





உறவுகள்

காலம் காலமாக நம்மை பின்னிப் பிணைந்திருந்தது
பின்னிப் பினைந்திருந்ததெல்லாம் இப்போ சிக்கலாக ஆனது
சிக்கலிலே மாட்டிகிட்டு உறவுகள் சிக்கிக்கிட்டு தவிக்குது
சிக்கித் தவிக்கும் உறவுகள் இப்போ சில்லறைக்கு ஏங்குது
சில்லறையே உறவுகளாக மாறுகின்ற வேளையில்
உறவுகளை கட்டி காக்கும் உள்ளங்களும் இருக்குது
உள்ளங்களும் உறவுகளும் ஒன்றாக இருந்திட்டால்
மனித நேயம் மாட்டிகிட்டு முளித்திடாமல் காத்திடும்.

திருமந்திரம் http://www.shaivam.org/siddhanta/thm.html

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
திருமூலர்
திருமந்திரத்தை படித்தறிய மேற்கண்ட வெப் சைட் க்குச செல்லவும்.
அன்புடன்.(சிவோகம்)

நினைவில் உதித்தவைகள்

எல்லாமே மாறிப்போச்சு !
சுயநலமருத்துட்டு
பொது நல மேத்துகிட்டு
அரசியலுக்கு வந்ததெல்லாம் அந்தகாலம்
சும்மா பொதுவாக பேசிகிட்டு
சுயநல மேத்துகிட்டு
வர்றாங்க அரசியலுக்கு இந்த காலம் !
நல்ல பல தொழில் செஞ்சு
நாளும் உழைத்துக்கிட்டு
நாலு பேருக்கு உதவியது அந்தக்காலம்
கலப்படமே தொழிலாக் கொண்டு
நித்தம் நித்தம் ஏமாத்திகிட்டு
நிதர்சனமாய் வாழ்வது இந்தக் காலம் !
தமிழனாக பிறந்தவங்க தமிழே பேசி
வாழ்ந்த தெல்லாம் அந்தக்காலம்
தமிழனாக பிறந்தவங்க
தமிழ் பேச மறுக்குறது இந்தக்காலம்
ஊரெல்லாம் நல்லவங்க அந்தக்காலம்
ஊருக்கு நாலு பேர் இருந்தாப்
போதுங்குறது இந்தக்காலம்
ஓரளவு பொதுநலம் இருந்தது அந்தக்காலம்
சுயநலமே பொதுநலமாய் ஆனது இந்தக்காலம்
இப்படி சொல்லிகிட்டே போகலாம் -
அதுனால என்ன ஆக போகுது
இதோட முடிக்கிறேன்.
பழைய படி எல்லாம் மாறுனா சுகம்.
மனுதம் காக்கப் பட வேண்டும்.
*****

அந்தமான் www.and.nic.in

அந்தமான் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டுமானால் மேற்கண்ட வெப் சைட்டில் செல்லலாம் முழுமையான தகவல் தங்களுக்கு கிடைக்கும்.
இது நான் பிறந்து வளர்ந்த தீவு.
வங்கத்து சிங்கம் சுபாசால் மூவர்ணக் கொடிஏற்றிய சுதந்திர பூமி
இந்தியாவிலேயே முதன் முறையாக சுதந்திரக் காற்றை சுவாசித்த பூமி
சுதந்திரத்தின் வலியினை உணர்ந்த பூமி
சுதந்திரத்தின் வலிமையினை முழுமையாக உணர்ந்த பூமி
நம் நாட்டில் பிறந்து
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஒவ்வொரு குழந்தையும்
தம் வாழ்நாளில் ஒரு முறையாவது வந்து தரிசிக்க வேண்டிய உன்னத பூமி.