Monday, March 4, 2013

ஈழத்து எந் தமிழன்.


பலர் மானம் காத்த எந்தமிழன்
தன் மானமிழந்து நிற்கிறான்
வானமே காவலாக
வசைகள் பலவும் ஏற்கிறான்

கடல் கடந்து வணிகம் செய்து
காற்பதித்த பெருமை போக
கண்கள் முன்னே கால் நடை போல்
கவணிப்பின்றித் திரிகிறான்

உலகெலாம் ஆண்ட தமிழன்
உறைவிடமின்றி கிடக்கிறான்
உன்னத புவியில் கால்பதிக்க
உரிமை இன்றித் தவிக்கிறான்

காலமே புவிக் கோளமாக
மாறிநின்ற போதிலும்
சத்தியத்தின் சக்தி மட்டும்
சாட்சி சொல்ல வேண்டுமே

சரித்திரம் ஒருநாள் கூறும்
இந்த காட்சிகள் யாவும் மாறும்
உலகை ஆண்ட உன்னத தமிழன்
மீண்டு எழுவான் ஆட்சி புரிவான்.

No comments:

Post a Comment