Sunday, January 29, 2012

குடியரசு தினம்

இந்தியப் பேரரசின் 63வது குடியரசு தினம்
கோலாகலமான கொண்டாட்டம்
வரலாறு காணாத பாதுகாப்புடன்
புதுதில்லி திகழ்கிறது (ப)புதுமையாய்
குண்டு துளைக்காத ஊர்தியில்
காவலர்களின் அணிவகுப்புகளோடு
பவனிவருகிறார் பாரதத்தின் குடியரசுத் தலைவர்
இத் தேசமதில் ஏனோஇன்னும்
ஒழியவில்லை பட்டினிச்சாவு
பஞ்சாபில் பயங்கரவாதம்
வங்கத்திலோ நக்சல் தீவிரவாதம்
ஆந்திராவில் தெழுங்கானா கோரிக்கை
காஷ்மீரிலோ தீவிரவாதி ஊடுருவல் - இட
ஒதுக்கீட்டுப் பட்டியலில் உரிமை கோரி
உ.பி மற்றும் ம.பி யில் போராட்டம்
தமிழகத்தில் தண்ணீர் இல்லை
இருக்கும் கேரளமோ தர மறுக்கிறது
கருநாடகத்திலோ சகோதர ஊழல் என்றால்
தலைநகரிலோ விளையாட்டுத் துறையில்
தாயகத்தினை காக்கும் பொருப்பிலிருக்கும்
பெரியவரின் பிறந்த நாள் கணக்கிலே பிழை
எல்லையோர கடல் பகுதியில் - என்றென்றும்
மீளாத் துயரம் மீனவர்களின் வாழ்வில்
எரிகிற வீட்டில் பிடுங்கியமட்டும் லாபம்
என்பதைப் போல்
எது எப்படி இருந்தாலும் ஊழல் மட்டும்
ஒழியவில்லை இன்னும் நம் தேசத்தில்
நாள்தோறும் கொலை நாடுதோறும் கொள்ளை
தெருவெங்கும் முழக்கம் - தேசம்
முழுதும் கலக்கம்
அரசியல் ஆதாயத்தில்
இன்னும் அரைகுறை வியாபாரிகள்
நம் தேசத்தினை ஆள
இன்னும் எத்தனை நாள்
அறிக்கைகளும் அறிவிப்புகளும்
இலவசமாய்
அனைவருக்கும் பொதுவான கல்வி
தேச நதிநீர்த்திட்டம்
படித்த அனைவருக்கும் வேலை வாய்ப்பு
இவை போன்ற இன்னும் பல
பேசுவது பெருமையாய்தான் இருக்கிறது
இன்னும் எத்தனை வருடங்கள்
என்றுதான் புரியவில்லை
கிடப்பதெல்லாம் கிடக்கட்டும்
கிழவனை தூக்கி நடுவில் வை
என்பதனைப் போல்
நாமும் கொண்டாடுகிறோம்
குடியரசு நாளிதனை.

No comments:

Post a Comment