Tuesday, January 24, 2012

திருமண வாழ்த்து

அறுகு போல் வேரோடி
ஆல் போல் தழைத்து
இன் தமிழ்ச்சுவைபோல் இயைந்து
ஈகை பல புரிந்து
உற்ற தமிழ் மக்களோடு - எவர்க்கும்
ஊறு விழைவிக்காது
என்பும் பிறர்க்காய் - எண்ணி
ஏனிந்த யாக்கை பெற்றோமென்றே
ஐயம் தெளிந்த பின்னர்
ஒற்றுமையாய் உறவாடி
ஓங்கார ஒலியெழுப்பி
ஒளடதங்கள் நீங்க
ஃதோடு வாழ்வாங்கு வாழியவே.

No comments:

Post a Comment