Thursday, August 19, 2010

உறவுகள்

காலம் காலமாக நம்மை பின்னிப் பிணைந்திருந்தது
பின்னிப் பினைந்திருந்ததெல்லாம் இப்போ சிக்கலாக ஆனது
சிக்கலிலே மாட்டிகிட்டு உறவுகள் சிக்கிக்கிட்டு தவிக்குது
சிக்கித் தவிக்கும் உறவுகள் இப்போ சில்லறைக்கு ஏங்குது
சில்லறையே உறவுகளாக மாறுகின்ற வேளையில்
உறவுகளை கட்டி காக்கும் உள்ளங்களும் இருக்குது
உள்ளங்களும் உறவுகளும் ஒன்றாக இருந்திட்டால்
மனித நேயம் மாட்டிகிட்டு முளித்திடாமல் காத்திடும்.