Monday, August 23, 2010

காதல்

உணர்வுகள் முழுதும் ஒன்றிக் கிடக்கும்
உன்னதமான உறைவிடம்.
உற்றார் பெற்றோர் உறவினர் அனைத்தும்
ஊழ் வினைபோலே துறத்திடும்.

உறவுகள் இன்றி தவித்திடும் போது
உறங்க விழிகள் மறுத்திடும்.
உறவும் உணர்வும் ஒன்றானால்
காதல் கூட சுகம் தானே !

காதல் என்பது கொச்சை அல்ல
காணும் கண்களைப் பொறுத்தது தான்
கண்களும் காதலும் ஒன்றானால்
கண்ணீர் கூட இணித்திடுமே !

இம்மையும் மறுமையும் அதற்கில்லை
இதயங்கள் இணைவது மறுப்பதில்லை
இருவரின் இதயங்கள் இணைவதற்காக
ஏனையர்கள் இருட்டில் தவிப்பதும் ஏன் ?

காதலும் காமமும் ஒன்றென்று
காண்பவர் பலரும் கருதுகிறார்
காதலும் காமமும் ஒன்றல்ல - ஆனால்
ஒன்றை விட்டு மற்றது பிரிவதல்ல.

காமம் அன்றி காதல் நிலைத்திடும்
காதலில் காமம் வசப்படும்
உலகத்து உயிர்கள் நிலைத்திருக்க
இரண்டும் ஒன்றாய் இறைவனின் படைப்பில்.
****