Thursday, August 19, 2010

காலம்

யாருக்காகவும் நிற்காது
யாரையும் எதிர்க்காது
தமக்குள்ளே வருபவரை
தன்னோடு அழைத்து செல்லும்
பருவம் மாறும்
யுகங்கள் மாறும்
காலம் என்றும் மாறாது
மாறுவதாய் தெரிந்தாலும்
என்றும் மாறாமல் சுழல்வது
காலத்தையும் விஞ்சி நிற்கும்
கருத்துகள் பலவும் படைத்திட்டால்
காலத்தினுள் நாம் மூல்கிடினும்
நம் கருத்துகள் காலத்தினை
கடந்து நிற்கும்.