Wednesday, May 23, 2012

ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்


ஊரைக்கெடுக்கும் உத்தமர்கள்

காவியில் சிலர்
காதியில் பலர்
காக்கி உடுப்பிலும்
காக்கும் பொருப்பிலும்
அதிகார வர்க்கத்தின்
ஆதிக்க நிலையிலும்
இன மொழி மதவாத
மதிப்புமிகு மருவாதைகளும்
பணத்திற்காய் நித்தம்
பிணம் தின்னும் கழுகுகளும்
சமூக அந்தஸ்துள்ள
சமயப் பெருச்சாளிகளும்
சுயநலத்தின் சுகத்திற்காய்
ஏங்கும் சுயவிளம்பரப்பிரியர்களும்
எது நிகழ்ந்தாலும் எமக்கென்ன
என்று திரியும் ஏதிலிகளும்
வீண் பேச்சு பேசி வெட்டியாய்த்
திரியும் வெடலைகளும்
எந்தப் பொருப்பும் ஏற்க்க மறுக்கும்
பொருப்பில்லாதவர்களும்
உலக நடப்பு தெரிந்தும் தெரியாதவர்களாய்
திரியும் கணவான்களும்
வாக்கு போடக்கூட வாக்கிங் செல்ல
துணிபு இல்லா சோம்பேரிகளும்
நோட்டுக்கு ஓட்டு என்று
விலை பேசும் வித்தகர்களும்
விலைபேசி வாக்களிக்கும்
சாமானியரும்
தவறு கண்டும் காணாதவராய்
போகும் குருடர்களும்
கலப்படத் தொழில் செய்யும்
கலப்பினமும்
விளையாட்டுகளை விலை
பேசும் வீணர்களும்
அகம் ஒன்று புறம் ஒன்றாய்
ஜெகம் போற்ற வாழ்பவரும்
இது போன்ற இன்னும் பலர்
இதே வழியில் செல்பவர்கள். . .
ஊரை மட்டு மல்ல உலகை கெடுக்கும் உத்தமர்கள்.

No comments:

Post a Comment