உயிரோ அல்ல உடலோ -என்
இதயத்தில் உதித்த மலரோ
கனவோ அல்ல நினைவோ
அவள் கலந்ததென்ன உறவோ
இசையோ அல்ல மழையோ- ஈருடல்
சேரும் போதென்ன நிலையோ
குயிலோ அல்ல குரலோ- அவள்
கூவுவதென்ன மொழியோ
நிலவோ கடும் குளிரோ -அவள்
கண்களில் அத்துனை நிறைவோ
இதமோ அல்ல பதமோ
இயற்கையே இது தகுமோ
மகரந்த ங்களின் மழையோ- சற்றே
இதமாய் தாங்கிடும் துணிவோ
அகரம் முதலாய் அவளோ
அஃகு பஞ்ச்சரான நிலையோ
பிரபஞ்சத்தில் ஆதி முதலாகவே -இதுவோ
இங்கு நிகழ்வது தான் புதிதோ
இயற்கையில் நியதிகள் உளதோ
உணர்வுற்ற பின்னே பிரிவோ.
இதயத்தில் உதித்த மலரோ
கனவோ அல்ல நினைவோ
அவள் கலந்ததென்ன உறவோ
இசையோ அல்ல மழையோ- ஈருடல்
சேரும் போதென்ன நிலையோ
குயிலோ அல்ல குரலோ- அவள்
கூவுவதென்ன மொழியோ
நிலவோ கடும் குளிரோ -அவள்
கண்களில் அத்துனை நிறைவோ
இதமோ அல்ல பதமோ
இயற்கையே இது தகுமோ
மகரந்த ங்களின் மழையோ- சற்றே
இதமாய் தாங்கிடும் துணிவோ
அகரம் முதலாய் அவளோ
அஃகு பஞ்ச்சரான நிலையோ
பிரபஞ்சத்தில் ஆதி முதலாகவே -இதுவோ
இங்கு நிகழ்வது தான் புதிதோ
இயற்கையில் நியதிகள் உளதோ
உணர்வுற்ற பின்னே பிரிவோ.
No comments:
Post a Comment