Friday, May 18, 2012

என்னவளே !

உயிரோ அல்ல உடலோ -என்
இதயத்தில் உதித்த மலரோ

கனவோ அல்ல நினைவோ
அவள் கலந்ததென்ன உறவோ

இசையோ அல்ல மழையோ- ஈருடல் 
சேரும் போதென்ன நிலையோ

குயிலோ அல்ல குரலோ- அவள் 
கூவுவதென்ன மொழியோ

நிலவோ கடும் குளிரோ -அவள்
கண்களில் அத்துனை நிறைவோ

இதமோ அல்ல பதமோ
இயற்கையே இது தகுமோ

மகரந்த ங்களின் மழையோ- சற்றே
இதமாய் தாங்கிடும் துணிவோ

அகரம் முதலாய் அவளோ
அஃகு பஞ்ச்சரான நிலையோ

பிரபஞ்சத்தில் ஆதி முதலாகவே -இதுவோ
இங்கு நிகழ்வது தான் புதிதோ

இயற்கையி
ல் நியதிகள் உளதோ
உணர்வுற்ற பின்னே பிரிவோ.

No comments:

Post a Comment