பசும்பொன் கண்டெடுத்த
பத்தரைமாத்துத் தங்கமாம்
உக்கிரபாண்டி இந்திராணி - ஈன்றெடுத்த
இயற்றமிழ் சொற்றொடராம்
ஊரறிந்த நாயகனாம் - தேவர்
உண்மை உரைப்பவராம்
வீரத்தின் விளைநிலமாம் - தேவர்
விவேகத்தின் சுடரொளியாம்
ஆன்மிகத்தின் அறிவொளியாம் - தேவர்
அரசியலின் கலங்கரை விளக்காம்
தேசிய விடுதலைக்காய் - தேவர்
தீராதுழைத்திட்டார்
கால்பகுதி வாழ்நாளில் - தேவர்
சிறைதனிலே கழித்திட்டார்
அடிமைத்தளைகள் அறுந்திடவே - தேவர்
அயராது ளைத்திட்டார்
ஆள் பிடிக்கும் சட்டத்தினை -
தேவர்
அடியோடு அகற்றிட்டார்
நேதாஜி போஸ் உடனே - தேவர்
நேர்மையோடு பாடுபட்டார்
ஊர் முழுக்க படை திரட்டி - தேவர்
ஒன்றிணைந்து உழைத்திட்டார்
தீண்டாமை ஒழிந்திடவே - தேவர்
தீர்க்கமாக செயல்பட்டார்
தமிழகம் முழுவதிலும் - தேவர்
தளராத் தொண்டு செய்தார்
காங்கிரஸ் கட்சியினை - தேவர்
கால்பதிக்க
வைத்திட்டார்
ஊருக்காய் உழைத்தவர் - தேவர்
உண்மையாய் வாழ்ந்தவர்.
சாதியம் மறுத்தவர் - தேவர்
சமத்துவம் கண்டவர்
சமபந்திதனை கொண்டு - தேவர்
சமரசம்
கண்டவர்
தம் சொத்துக்களை - தேவர்
சரிபங்கு பகிர்ந்தளித்தார்
சாதி மத பேதமன்றி - சம பங்கு
தானளித்தார் தேவர்
தேசியம் காத்திட்டார் - தேவர்
தெய்வீகம் கண்டுணர்ந்தார்
தன்நலம் கறுதாது என்றும்
பிறர் நலம் காத்தவர் - தேவர்.
No comments:
Post a Comment